Home Archivio
2012-10-12 16:06:51
அக். 13. கவிதைக் கனவுகள்.......சகித்துக்கொள்ள முடியாதது துரோகம். எழுதியவர் : புலமியம்பிகா
புழு ஒன்று
தேகத்தில் ஊர
புல்லரித்துப் போகாதோ
அழுகிய பழம்
சாறு வடிக்கக் கண்டும்
சங்கடம் வாராதோ
உள்ளம் கொண்ட
வஞ்சனையோடு வாழ
வருத்தமும் ஏற்படாதோ
மனிதமே துரோகம்
மரணவேதனை தரும்
மாற்று வைத்தியமில்லா
நோய் அல்லவா
அழகாக வேண்டுமென்றே
அசுத்தமாய் அகற்று
கொலைக் கருவியேன்றே
தூக்கி எறிந்து தூற்று!!!
All the contents on this site are copyrighted ©.