தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை என்கிறார் அமைச்சர் ஜீ.எல்.
பீரிஸ்
அக். 11, 2012. இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்கும் திட்டத்தில் இருந்து
பின்வாங்கவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மக்களை அரசு கைவிட்டுள்ளதுடன்,
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்கும் எண்ணமும் அரசிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு இந்திய ஊடகம் ஒன்றுக்கு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியதையொட்டி
இவ்வாறு கூறியுள்ளார் வெளியுறவு துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ். அரசியல் தீர்வு வழங்குவதாக்க்
கூறி காலம் கடத்தும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தி இருந்தது தொடர்பாகவும் கருத்து வெளியிட்ட அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ், அரசியல் தீர்வினை வழங்கும் பொருட்டே, நாடாளுமன்ற தெரிவுக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் இணைந்து கொண்டு தீர்வினை வழங்க உதவிபுரிய வேண்டும்
என்றும் கோரியுள்ளார்.