நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு மேலும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்
அக்.06,2012. உலக அளவில் பெண்கள், ஐந்து சட்ட அமைப்பாளர்களுக்கு ஒருவர் வீதம் இருக்கின்றவேளை,
நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு மேலும் இடங்கள் ஒதுக்கப்படுமாறு பெண் சபாநாயகர்கள் வேண்டுகோள்
விடுத்தனர். உலகின் பெண் சபாநாயகர்கள் புதுடெல்லியில் நடத்திய இரண்டு நாள் கூட்டத்தின்
இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்தகைய முயற்சி இந்தியாவில் இடம்பெற்று வருவதாகக்
கூறப்பட்டுள்ளது. தற்போது உலகின் 190 நாடாளுமன்றங்களில் 37 பெண்கள் சபாநாயகர்களாக
உள்ளன்ர்.