Home Archivio
2012-10-06 13:35:15
அக்டோபர் 07, கவிதைக் கனவுகள் - குடும்ப வாழ்வின் மகத்துவம்
சேவியர் தாசய்யன் கவிதைச் சாலை என்ற இணையத்தளம் தந்த கவிதை...
அடுத்தவர் வாழ்க்கை
அமைதியாய் கழிவதாகக்
கருதிக் கொள்கிறது
ஒவ்வொருவர் வாழ்க்கையும்.
ஒப்பீடுகளின்
உரசல்களால்
எரிந்து கொண்டிருக்கின்றன
உறவுகளின் காப்பீடுகள்.
அழுகையையும்
இயலாமையையும் புதைக்க
எல்லோரும்
தேடுகின்றனர்
சதுர அடிகளில் சில அறைகள்.
திரைச் சீலைகளும்
தாழிட்ட சன்னல்களும்
‘மம்மி’களை
உள்ளுக்குள் நிறைத்து
பூங்காக்களை
வாசல் வழியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன
எப்போதேனும்
ஆறுதல் தேடி
அடுத்த வீட்டுக் கிணற்றடியில்
அமரும் பெண்களும்,
எதேச்சையாய்
‘பார்’களில் சந்தித்துக் கொள்ளும்
ஆண்களும்
கண்டு கொள்கின்றனர்
தங்கள் குடும்ப வாழ்வின் மகத்துவத்தை
All the contents on this site are copyrighted ©.