அக்.05,2012. மடகாஸ்கர் நாட்டுத் தலைநகர் Antananarivo விலுள்ள இயேசு சபையினரின் இல்லம்
சூறையாடப்பட்டுள்ளதுடன் இயேசு சபை அருள்தந்தை Bruno Raharison கொடூரமாய்த் தாக்கப்பட்டு
இறந்தார் என்று அந்நகரின் திருஅவை வட்டாரங்கள் தெரிவித்தன. வாகனத்தில் சென்று கொண்டிருந்த
அருள்தந்தை Brunoவை வழிமறித்தக் கொள்ளையர்கள் அவரைத் துப்பாக்கியால் பலதடவைகள் சுட்டும்,
ஆயுதங்களால் நெஞ்சிலும் முதுகுத்தண்டுவடத்திலும் தலையிலும் பலமாய்க் குத்தியும் கொலை
செய்துள்ளனர். இதற்கிடையே, அக்குருவோடு எப்பொழுதும் பயணம் செய்யும் ஒரு சிறுவனும்
இன்னும் இருவரும் இக்கொலை சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. அருள்தந்தை
Brunoவின் அடக்கச்சடங்கு இவ்வியாழனன்று இடம்பெற்றது.