2012-10-05 15:49:26

பசிபிக் பகுதியில் மின்னஞ்சல்வழி நற்செய்தி


அக்.05,2012. கத்தோலிக்கர் மிகப்பரந்த விழுமியங்களுடன் தங்களது விசுவாசத்தை ஆழப்படுத்துவதற்கு விசுவாச ஆண்டு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பசிபிக் தீவுகளின் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Paul Donoghue கூறினார்.
பசிபிக் பகுதியில் அமைந்திருக்கும் தீவுகளுக்கு இடையே, அப்பகுதியின் கத்தோலிக்கச் சமூகங்களுக்கு இடையே இருக்கும் நீண்ட பயண தூரங்கள் பற்றி ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் விளக்கிய, கூக் தீவுகளின் Rarotonga ஆயர் Paul Donoghue, எடுத்துக்காட்டாக Penrhyn என்ற சிறிய தீவுக்குத் தனது இடத்திலிருந்து விமானத்தில் செல்வதற்கு 4 மணி நேரம் எடுக்கும் என்று கூறினார்.
குருக்கள் இல்லாமல் வேதியரின் உதவியுடன் 70 கத்தோலிக்கர் தங்களது விசுவாச வாழ்வை வாழ்ந்து வருகின்றனர் என்றும், இத்தீவுகளில் சிறிய கத்தோலிக்கக் குழுக்கள் தங்களது விசுவாச ஒளியைத் தொடர்ந்து காத்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.
தங்களது மேய்ப்புப்பணித் திட்டங்களை இணைக்கும் பாலமாகப் புதிய தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன என்றுரைத்த ஆயர் Donoghue, மின்னஞ்சல் மூலமாகத் தங்களது நற்செய்திப்பணிகளைச் செய்து வருவதாகவும் உரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.