2012-10-04 16:48:31

பங்களூரு கிறிஸ்தவ சிறார் மையம் தாக்கப்பட்டுள்ளது


அக். 04, 2012. மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற பொய்யானக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பங்களூரின் Sampigehally குழந்தைகள் முன்னேற்ற மையம் மூடப்படும் ஆபத்து உள்ளதாக Asia News செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஏழைச் சிறார்களுக்கென கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் இந்த மாலை வகுப்பு மையத்தை சில நாட்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு விசாரணைக்கென வந்த காவல்துறையினர், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் குறித்த முழு விவரங்களை 24 மணிநேரத்தில் நிரூபிக்கவேண்டும், இல்லையெனில் இக்கிறிஸ்தவ குழு மீது வழக்குத் தொடரப்படும் என உரைத்துச் சென்றுள்ளனர்.
மதம் இனம் மொழி என்ற எவ்வித பாகுபாடும் பார்க்காமல், Sampigehally பகுதி சிறார்கள் அனைவரும் மாலை நேரங்களில் இம்மையத்தில் வந்து வீட்டுப்பாடங்களை முடித்துச் செல்ல கடந்த 15 ஆண்டுகளாக உதவி வரும் இக்கிறிஸ்தவ மையத்திற்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் சில இந்து தீவிரவாத அமைப்பினர்







All the contents on this site are copyrighted ©.