2012-10-04 16:46:14

நைஜீரியாவில் இசுலாமிய தீவிரவாதக் குழுவால் கிறிஸ்தவ மாணவர்கள் கொலை


அக்.04, 2012. வடகிழக்கு நைஜீரியாவின் Mubi கல்லூரி மாணவர் விடுதிக்குள் புகுந்த இசுலாமியத் தீவிரவாதக் குழு ஒன்று, கிறிஸ்தவ மாணவர்களைத் தனியாகப் பிரித்து அவர்களைக் கொலைசெய்துள்ளது.
25 முதல் 30 கிறிஸ்தவ மாணவர்கள் கொலைச்செய்யப்பட்டிருக்கலாம் என உரைக்கும் செய்தி நிறுவனங்கள், Boko Haram இசுலாமிய தீவிரவாதக் குழுவே இதை நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளின் ஒவ்வோர் அறையையும் சோதனையிட்ட தீவிரவாதக் குழு, அங்கிருந்த இசுலாமிய மாணவர்களிடமிருந்து கிறிஸ்தவ மாணவர்களைத் தனியாகப்பிரித்து, பின்னர் அவர்களுள் சிலரைத் துப்பாக்கியால் சுட்டும் மீதியுள்ளோரை கழுத்தை வெட்டியும் கொலை செய்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.