அக்டோபர் 4ம் தேதி விழா எடுக்கப்படும் புனித பிரான்சிஸ் அசிசியின் செபம் ஆண்டவரே,
என்னை அமைதியின் கருவியாய் ஆக்கியருளும் வெறுப்பு உள்ள இடத்தில் அன்பையும் காயம்பட்ட
இடத்தில் மன்னிப்பையும் சந்தேகம் உள்ள இடத்தில் பற்றுறுதியையும், மனத்தளர்ச்சி
உள்ள இடத்தில் நம்பிக்கையையும், இருள்நிறைந்த இடத்தில் ஒளியையும், சோகம் உள்ள இடத்தில்
மகிழ்ச்சியையும் விதைக்க எனக்கு அருளும். ஓ, விண்ணகப் போதகரே, நான் ஆற்றுப்படுத்தப்பட
விரும்புவதைவிட ஆற்றுப்படுத்தவும், புரிந்துகொள்ளப்பட வேண்டுமென்பதைவிட புரிந்துகொள்ளவும், அன்புகூரப்பட
வேண்டுமென்பதைவிட அன்புகூரவுமான வழிகளைத் தேடச் செய்யும். ஏனெனில், கொடுப்பதில்
பெறுகிறோம். மன்னிப்பதில் மன்னிப்புப் பெறுகிறோம். இறப்பதில் நித்தியவாழ்வுக்குப்
பிறக்கின்றோம்