கோவா தலத்திருஅவை குறை : அரசில் காந்தியக் கொள்கைகள் மதிக்கப்படுவதில்லை
அக்.03,2012. இந்தியாவின் கோவா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும்
மகாத்மா காந்தியின் கருத்துக்கோட்பாடுகளைப் பின்னோக்கித் தள்ளுகின்றனர் என்று கோவா தலத்திருஅவை
குறை கூறியது. இச்செவ்வாயன்று மகாத்மா காந்தியின் 143வது பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்ட
நிகழ்ச்சியில் பேசிய கோவா மறைமாவட்டத்தின் சமூகநீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் செயலர்
அருள்பணி சாவியோ ஃபெர்னாடெஸ், கிராமப் பஞ்சாயத்துக்கள் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களால்
அநீதியான முறையில் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன எனக் கூறினார். பாரதிய
ஜனதா கட்சியின் தலைமையில் கோவா மாநிலத்தை ஆளும் கூட்டணி அரசு அதிகாரப்பகிர்வுக் கொள்கையைப்
பின்பற்றுவதில்லை என்றும் அக்குரு கூறினார்.