2012-10-03 16:12:22

உலகில் ஆயுதங்கள் மௌனப்படுத்தப்படுமாறு முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமெயோ அழைப்பு


அக்.03,2012. உலகில் ஆயுதங்கள் மௌனப்படுத்தப்படுமாறு கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமெயோ இப்புதனன்று வெளியிட்ட அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
மத வேறுபாடுகளை மதிக்கவும் வன்முறையை நிறுத்தவும் கேட்டுக் கொண்ட முதுபெரும் தலைவர் பர்த்தலோமெயோ, மனித சமுதாயம் ஒரு குழப்பமான மற்றும் உறுதியற்ற தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
சமய முற்சார்பு எண்ணங்கள் அல்லது சமயத்தின் பெயரால் வன்முறையில் இறங்கும்போது, காழ்ப்புணர்வு, வெறுப்பு, நம்பிக்கையின்மை ஆகிய சூழல்களை உருவாக்கி நாம் நமது வாழ்வையும் நமது விசுவாசத்தையும் ஆபத்தில் வைக்கிறோம் என்றும் முதுபெரும் தலைவரின் அறிக்கை கூறுகிறது.
கடந்த சில வாரங்களாக உலகில் இடம்பெற்றுள்ள வன்முறைகளைப் பார்க்கும்போது மனித சமுதாயத்தின் அமைதியும் உறுதியான தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளன, எனவே உலகில் ஆயுதங்கள் மௌனப்படுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தலைவர்.







All the contents on this site are copyrighted ©.