2012-10-03 16:18:40

இந்தியாவில் 2011ல் 1,35,000 தற்கொலைகள்


அக்.03,2012. இந்தியாவில் 2011ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர், இவ்வெண்ணிக்கையில் மேற்குவங்காளம் முதலிடத்தில் உள்ளது என அரசு வெளியிட்ட அண்மை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இவ்வெண்ணிக்கையில் 1.7 விழுக்காட்டுக்கு வறுமையும், 24.3 விழுக்காட்டுக்கு குடும்பப் பிரச்சனைகளும், 19.6 விழுக்காட்டுக்கு நோயும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
யூனியன் பகுதிகளில் டில்லி இதில் முதலிடத்தில் உள்ளது.
மேலும், இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த ஏறக்குறைய அறுபதாயிரம் நிலமற்ற ஏழை மக்கள் புதுடெல்லிக்கு நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
2011ம் ஆண்டில் இதேமாதிரியான நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கப்பட்டது. எண்பதாயிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்டிருந்த அந்த நடைப்பயணத்தின்போது 352 மாவட்டங்களில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.