அக்.02,2012. கிறிஸ்தவர்கள் சமயச் சண்டையை விரும்பவில்லை, ஆனால் தங்களது வழிபாட்டுத்தலங்கள்
தாக்கப்படுவது குறித்து பொறுமையிழந்துவிட்டோம் என்று கென்யாவின் தலத்திருஅவை வட்டாரங்கள்
கூறுகின்றன. நைரோபியின் ஆங்லிக்கன் சபையின் புனித பொலிக்கார்ப்பு ஆலயத்துக்கு எதிரானத்
தாக்குதல்களில் இரண்டு சிறார் கொல்லப்பட்டது குறித்து பிதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய
கிறிஸ்தவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்கள் சிறார்களைக் குறிவைத்து
நடத்தப்பட்டுள்ளதாகவும், கென்ய மக்கள் மட்டுமல்ல, அந்நாட்டுக்கு அகதிகளாகத் தொடர்ந்து
வந்து கொண்டிருக்கும் சொமாலியா, சூடான் மற்றும் எத்தியோப்பிய நாடுகளின் மக்களும் பாதுகாப்பின்மையை
உணருவதாகவும் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.