பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகின்றன
அக்.01, 2012. இறைவாக்கினர் முகமதுவை கேலி செய்யும் "The Innocence of Muslims," என்ற
திரைப்படத்திற்கு எதிரான வன்முறைகளில் பாகிஸ்தானின் Mardan நகர் தூய பவுல் கோவில் தாக்கப்பட்டுள்ளதுடன்,
பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர் ஒருவரும் படுகாயப்படுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் வாழும்
கிறிஸ்தவர்கள் இத்திரைப்படத்தை வன்மையாக கண்டித்துள்ளபோதிலும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து
தாக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர்
Naeem Samuel பலமாகத் தாக்கப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக
எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். கிறிஸ்தவர்களுக்கு எதிரானத் தாக்குதலில் கடந்த ஒரு
மாதத்தில் மட்டும் ஐந்து கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்