Home Archivio
2012-10-01 15:47:13
கவிதைக் கனவுகள் - முதுமை அழைக்கிறது..(எழுத்தாளர் விஜயசங்கர்)
முதுமை வந்து இளமை முகத்தில்
முத்தம் கொடுக்குது - அந்த
முதுமையன்பை இளமை தள்ளி
முகத்தை திருப்புது ...
முகத்தை திருப்பி முறைத்த போதும்
முத்தம் கிடைக்குது - இளமை
அகத்தில் மட்டும் அழகை எண்ணி
அழுது வடிக்குது ...
அழிந்திடாத அழகு என்று
ஆசை நினைத்தது - அந்த
கழிந்தகால நினைவு இன்று
கண்ணை நனைத்தது ...
அழகு போல் மனிதவாழ்வும்
அழிந்துபோய்விடும் - எங்கள்
இளமைக்கால கனவும் ஒருநாள்
இறந்து போய்விடும் ...
ஆடி அடங்கும் வாழ்க்கை
அறிந்து கொள்ளடா - மனிதா
ஆண்டவன் விட்ட வழி இதென்று
வாழ்ந்து காட்டடா .........
All the contents on this site are copyrighted ©.