செப்.28,2012. தாய்வானில் பொது நலனுக்காக உழைத்துவரும் கத்தோலிக்கரின் அரும்பணியைப் பாராட்டி
தாய்பேய் உயர்மறைமாவட்டத்துக்கு விருது அளித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர். பல்வேறு
கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு மதங்களையும் ஒன்றிணைத்துச் செயல்படுவதில் கத்தோலிக்கர்
எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றனர் மற்றும் இவர்களது நடவடிக்கைகள் நாட்டின் வாழ்க்கைத்தரத்தை
மேம்படுத்தியுள்ளன என்று இவ்விருது வழங்கும் நிகழ்வில் பேசியுள்ளார் பிரதமர் Chén Chōng. இம்மாதத்தில்
தாய்பேய் அரசு அங்கீகரித்துப் பாராட்டியுள்ள பல சமய நிறுவனங்களில் 7, கத்தோலிக்க நிறுவனங்களாகும்.