செப்.28,2012. உருகுவாய் நாட்டு காங்கிரஸ் அவையில் கருக்கலைப்பு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளவேளை,
அந்நாட்டு ஆயர்கள் அதற்குத் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இச்செவ்வாய்
இரவு 14 மணி நேரம் இடம்பெற்ற அமர்வில் 50 பேர் கருக்கலைப்புக்கு ஆதரவாகவும் 49 பேர் அதற்கு
எதிராகவும் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பு மூலம், ஒரு பெண் கருவுற்ற 12 வாரங்களுக்குள்
கருக்கலைப்புச் செய்வதற்குச் சட்டப்படி அனுமதியளிக்கப்படுகிறது. ஏறக்குறைய 33 இலட்சம்
மக்கள் வாழும் தென் அமெரிக்க நாடான உருகுவாயில் ஆண்டுக்கு ஏறக்குறைய முப்பதாயிரம் கருக்கலைப்புகள்
இடம்பெறுவதாக அரசு-சாரா குழுக்கள் கூறுகின்றன.