செப்.28,2012. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில்
மின்விநியோகத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், மின்விநியோகம் செய்யும் பகுதிகளின் அளவை
அதிகரிக்கவுமென ஆசிய வளர்ச்சி வங்கி அந்நாட்டுக்கு 13 கோடி டாலரைக் கடனாக வழங்கியுள்ளது. ஆசிய
வளர்ச்சி வங்கியின் இக்கடன் உதவி, இலங்கையின் பிற பகுதிகளிலும் மின்விநியோகத் திறனை மேம்படுத்த
உதவும் என்று அவ்வங்கியின் நிர்வாக அமைப்பு அறிவித்தது. ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியினால்
செய்யப்படும் இத்திட்டம் 2016ம் ஆண்டு டிசம்பரில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது