செப்.29,2012. அன்பு நேயர்களே, இயேசு சபை அருள்தந்தை ஜே.ஸ்டானி, ஒரு மனித உரிமை வழக்கறிஞர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக குஜராத் மாநிலத்தில் பணியாற்றிய இவர், குஜராத் மாநிலப் பழங்குடி
இன மக்களின் உரிமைகளுக்காகப் பல ஆண்டுகள் உழைத்திருப்பதோடு 28 பழங்குடி இனப் பெண்கள்
உட்பட 43 பழங்குடி இன மக்களை வழக்கறிஞர்களாக உருவாக்கியிருப்பவர். அதற்காக அஷோகா ஃபெல்லோஷிப்
என்ற பன்னாட்டு விருதையும் பெற்றிருப்பவர். தற்போது தெற்காசிய இயேசு சபை சமூக எழுச்சி
இயக்கங்களுக்கு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இயேசு சபை அருள்தந்தை ஜே.ஸ்டானியிடம்
குஜராத் மனித உரிமைகள் நிலவரம் பற்றிக் கேட்டோம்.