2012-09-27 15:55:33

கோவை மாவட்டத்தில், மின்தடை நீடிப்பால் தொழில் உற்பத்தி இழப்பு மாதம் ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாய்


செப்.26, 2012. தினமும் 12.00 மணி நேரம் முதல் 14.00 மணி நேரம்வரை மின்தடை நீடிப்பதால், கோவை மாவட்டத்தில் மின்சாரத்தை நம்பியுள்ள தொழில்கள் பாதிக்கப்பட்டு, இப்பகுதியின் உற்பத்தி இழப்பு, மாதம் ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாய் இருக்கும் எனத் தொழில் துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.
தொழில் நகரமாக விளங்கும் கோவையில் தினமும் 10.00-12.00 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிப்பதால், உற்பத்தி இழப்பு 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது என உரைத்த தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் தினகரன், கைத்தறித்துணித் துறை, மாதந்தோறும், 3,000 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பை சந்தித்து வருகிறது என்று கூறினார்.
மேலும், கோவையில் மின்சாரப் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள ஒரு மாதத்துக்கான உற்பத்தி இழப்பு நகைத் தயாரிப்புத்துறையில் 100 கோடி ரூபாய், விவசாயத்தில் 150 கோடி ரூபாய் என, கோவை மண்டலத்தில், மின்பற்றாக்குறையால் ஏற்படும் உற்பத்தி அளவு 5,500 கோடியாக இருக்கும் என, தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.