2012-09-27 15:36:34

கவிதைக் கனவுகள் - மனித இதயம் (கலில் கிப்ரான்)


“மனித இதயம்
உதவி நாடிக்
கூக்குரல் இடுகிறது.
மனித ஆத்மா
விடுதலை கேட்டு
மன்றாடுகிறது.
ஆனால்
நாம் அந்தக் கூக்குரல்களைக்
கவனிப்ப தில்லை!
காதில் கேட்பதில்லை!
புரிந்து கொள்வது மில்லை!
ஆனால்
அவற்றைக் கேட்டுப்
புரிந்து கொள்ளும் ஒருவனைப்
பைத்தியம் என்று சொல்லி
நாம் அவனை விட்டு ஓடுகிறோம்.”








All the contents on this site are copyrighted ©.