2012-09-27 15:59:02

உலகம் வெப்பமயமாவதால் 2030க்குள் 10 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்


செப்.26, 2012. உலக வெப்பமயமாதல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிடும் என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால் உலகில் வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, துருவப் பகுதிகளில் பனி உருகுவது அதிகரித்துள்ளது எனக்கூறும் டாரா என்ற மனிதஇனநலம் சார்ந்த ஆய்வு நிறுவனம், தற்போது காற்று, மாசு, பசி, நோய் போன்றவற்றால் 50 இலட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்ற நிலையில், பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 இலட்சமாக உயரும் எனவும் எச்சரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழப்பவர்களுள் 90 விழுக்காட்டினர், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.