2012-09-25 15:42:37

விசுவாச ஆண்டில் விசுவாசிகள் திருவருட்சாதனங்களில் பங்கேற்க அமெரிக்க ஆயர்கள் அழைப்பு


செப்.25,2012. திருவருட்சாதனங்களில் பங்கேற்பு, செபம், செயல்பாடு ஆகியவற்றின் வழியாக மலரவிருக்கும் விசுவாச ஆண்டில் விசுவாசிகள் பங்கெடுக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கேட்டுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நற்செய்தி அறிவிப்பு பணிக்குழுத் தலைவரான Green Bay ஆயர் David L. Ricken வெளியிட்டுள்ள அறிக்கையில், விசுவாசத்தையும் நற்செய்தி அறிவிப்புப்பணியையும் புதுப்பிப்பதற்கு திருஅவைக்கு விசுவாச ஆண்டு தக்க தருணமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விசுவாசிகளின் ஆன்மீக வாழ்க்கையின் வளர்ச்சியில் ஒப்புரவு திருவருட்சாதனம் முக்கிய அங்கம் வகிக்கின்றது என்றும் ஆயர் Ricken கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.