ஐ.நா.விடம் மாரனைட்ரீதி தலைவர் : மதங்களுக்கு எதிரான அவமதிப்புகள் தடைசெய்யப்பட வேண்டும்
செப்.25,2012. மதங்களுக்கு எதிரான அனைத்து அவமதிப்பு நடவடிக்கைகளும் தடை செய்யப்படுவதற்குத்
தீர்மானம் நிறைவேற்றப்படுமாறு லெபனன் மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Beshara
Rai ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். லெபனனின் Bkerkeயிலுள்ள
மாரனைட்ரீதி தலைமையகத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ-இசுலாம் கூட்டத்தில் இந்தத் தனது பரிந்துரையைப்
பொதுப்படையாக முன்வைத்தார் முதுபெரும் தலைவர் Rai. 'The Innocence of Muslims' என்ற
அமெரிக்கத் திரைப்படம் முஸ்லீம்களையும் இறைவாக்கினரையும் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களையும்
மற்ற மதத்தினரையும் புண்படுத்துவதாய் இருக்கின்றது என்பதால், இந்தத் திரைப்படத்துக்கு
எதிரான கண்டனங்களை மட்டும் ஏற்பதோடு நிறுத்திவிடாமல் மதங்களைக் கேலிசெய்யும் அனைத்தையும்
தடைசெய்வதற்கு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்படுமாறு அனைத்துலக சமுதாயத்தையும் விண்ணப்பிப்போம்
என்றும் கூறினார் முதுபெரும் தலைவர் Rai. மேலும், மதங்களை அவமதிக்கும் இத்தகைய செயல்களுக்கு
எதிராக உறுதியான நிலைப்பாடு ஒன்றை ஐ.நாவும், அனைத்துலக சமுதாயமும் எடுக்குமாறு முதுபெரும்
தலைவர் Rai, இம்மாதம் 13ம் தேதியன்று ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.