2012-09-25 15:48:39

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டையொட்டி புதிய ஆவணப்படம்


செப்.25,2012. வருகிற அக்டோபர் 11ம் தேதியன்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு அந்நாளில் இப்பொதுச்சங்கம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை வெளியிடுவதற்குத் திட்டமிட்டு வருகிறது திருப்பீட சமூகத்தொடர்பு அவை.
வத்திக்கான் ஒளிப்பட ஆவணக்காப்பகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 200மணி நேரங்களுக்கு அதிகமான படங்களிலிருந்து இந்தப் புதிய ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது Micromegas சமூகத்தொடர்பு நிறுவனம்.
இப்பொதுச்சங்கம் குறித்து இதுவரை வெளியிடப்படாத படங்கள், குறிப்புகள், உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த திருஅவைத் தலைவர்களின் சொந்த அனுபவங்கள், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இப்பொதுச்சங்கம் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் போன்றவை இந்தப் புதிய ஆவணப்படத்தில் உள்ளன.
1959ம் ஆண்டு சனவரியில் திருத்தந்தை அருளாளர் 23ம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டுவது குறித்து அறிவித்தது, அதன் பின்னர் அதற்கென நடைபெற்ற மூன்றாண்டு தயாரிப்புகள், இப்போதைய கிறிஸ்தவ உலகத்திற்கு இப்பொதுச்சங்கம் முன்வைக்கும் புதிய தூண்டுதல்கள் போன்வற்றையும் இந்த ஆவணப்படம் உள்ளடக்கியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.