செப்.25,2012. இத்தாலியின் அசிசியில் வருகிற அக்டோபர் 5,6 தேதிகளில் "அறியாத கடவுள்"
என்ற தலைப்பில் புறவினத்தார் முற்றம் என்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என இச்செவ்வாயன்று
நிருபர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. திருப்பீடக் கலாச்சார அவையும் "Oicos Riflessioni"
என்ற கழகமும் இணைந்து நடத்தும் இக்கூட்டத்தை இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்பொலித்தானோ
ஆரம்பித்து வைப்பார். இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்வார்கள்
எனவும் அறிவிக்கப்பட்டது. கடவுளை நம்புவோர் மற்றும் கடவுளை நம்பாதவர்களுக்கு இடையே
ஒரு நிலையான உரையாடலை ஏற்படுத்தும் புறவினத்தார் முற்றம் என்ற திட்டத்தின்கீழ் இத்தகைய
கூட்டங்கள், திருப்பீடக் கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசியின் தலைமையில்
ஏற்கனவே பல ஐரோப்பியத் தலைநகரங்களில் நடத்தப்பட்டுள்ளன