2012-09-24 14:01:25

கவிதைக் கனவுகள் – அமைதி என்பது... ஆக்கம் கவிஞர் தேவதேவன்


பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்

அமைதி என்பது மரணத் தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?

வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் இலட்சணமும்
புரிந்துவிடுகிறது.

அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ?








All the contents on this site are copyrighted ©.