2012-09-22 15:23:14

“நாசரேத்தூர் இயேசு” புத்தகத்தின் மூன்றாவது பகுதி கிறிஸ்மஸ்க்குள் தயார்


செப்.22,2012. “நாசரேத்தூர் இயேசு” என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் புத்தகத்தின் மூன்றாவது பகுதி இவ்வாண்டு கிறிஸ்மஸ்க்குள் விற்பனைக்குத் தயாராகிவிடும் என இவ்வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
வத்திக்கான் புத்தக வெளியீட்டு நிறுவனமும், இப்புத்தகத்தின் இத்தாலிய வெளியீட்டாளர் Rizzoliம் இவ்வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ள உடன்பாட்டின்படி, கிறிஸ்துவின் குழந்தைப்பருவம் குறித்த நாசரேத்தூர் இயேசு புத்தகத்தின் மூன்றாவது பகுதியின் இத்தாலியப் பதிப்பு இவ்வாண்டு கிறிஸ்மஸ்க்குள் விற்பனைக்குத் தயாராகிவிடும் எனத் தெரிகிறது.
இவ்வுடன்பாட்டின்படி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இப்புத்தகத்தின் உலகளாவிய பதிப்புரிமை Rizzoliக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நூலின் ஜெர்மன் மொழிப் பதிப்பும் இவ்வாண்டு கிறிஸ்மஸ்க்குள் விற்பனைக்குத் தயாராகிவிடும் எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புத்தகங்களின் பதிப்பக உரிமையைக் கொண்டுள்ள ஜெர்மன் வெளியீட்டாளர் Herder அறிவித்துள்ளார்.
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து அவர் உருமாறியது வரையிலான “நாசரேத்தூர் இயேசு” என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புத்தகத்தின் முதல் பாகம் 2007ம் ஆண்டிலும், இயேசு எருசலேமில் நுழைந்தது முதல் அவரது உயிர்ப்பு வரையிலான இரண்டாவது பாகம் 2011ம் ஆண்டிலும், வெளியிடப்பட்டன.
இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்த மூன்றாவது பாகம் 2012ம் ஆண்டில் வெளியிடப்படவிருக்கிறது.







All the contents on this site are copyrighted ©.