செப்டம்பர் 23, கவிதைக் கனவுகள் - குழந்தைக் கவிதைகள்
( நிலாரசிகன் பக்கங்கள் என்ற வலைத்தளத்தில் நிலாரசிகன் என்பவர் எழுதிய குழந்தைக் கவிதைகள்
பத்து என்ற கவிதையின் இரு பகுதிகள்...)
அப்பாவிடமும் அம்மாவிடமும் பள்ளியில்
பெற்ற "வெரிகுட்"ஐ பலமுறை சொல்லி ஏதோவொன்று குறைந்தவளாய் தன் பொம்மைகளிடம் சொல்ல
ஆரம்பித்தாள் அச்சிறுமி. தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள் அப்பாவாய், அம்மாவாய்.
வீடு
கட்ட குவித்திருக்கும் ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் சிறுமியும் அவளது
பொம்மையும். பொம்மையுடன் பேசுவதற்கென்றே தனிமொழியை உருவாக்கியிருந்தாள் சிறுமி. வெகுநேர
விளையாட்டிற்குபின் குடிசைக்குள் சென்ற சிறுமியின் வலக்கையில் தலையும் இடக்கையில்
உடம்புமாய் துண்டுகளாகியிருந்தது பொம்மை. அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள் அவள்.