2012-09-22 15:33:29

இந்தியாவில் காடுகளுக்குள் மக்கள் செல்வது தடைசெய்யப்படப் பரிந்துரை


செப்.22,2012. இந்தியாவில் அடர்ந்த காட்டுப் பகுதிகளை, மக்கள் செல்லக்கூடாதப் பகுதிகளாக அறிவிக்குமாறு உச்சநீதிமன்றம் நியமித்த குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது.
காடுகள் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் இக்குழு காடுகளின் பொருளையும் விளக்கி இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவிலுள்ள 1.89 விழுக்காட்டு அடர்ந்த காடுகளில் பெரும்பகுதி தேசியப் பூங்காவிலும் விலங்குகள் சரணாலயங்களிலும் உள்ளன எனக் கூறிய அக்குழு, மக்கள் இந்த அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுமாறு கேட்டுள்ளது.
1980ம் ஆண்டில் வனப் பாதுகாப்பு விதிமுறை கொண்டுவரப்பட்டபோது நாட்டில் அடர்ந்த காடுகள் 20 விழுக்காடு இருந்தன எனவும் அக்குழு கூறியது.







All the contents on this site are copyrighted ©.