2012-09-21 15:24:31

திருத்தந்தை : லொரேத்தோ திருத்தலத்துக்கு மேய்ப்புப்பணித் திருப்பயணம்


செப்.21,2012. வருகிற அக்டோபர் 7ம் தேதி உலக ஆயர்கள் மாமன்றத்தை ஆரம்பித்து வைக்கும் திருப்பலியில் புனித அவிலா ஜான் மற்றும் புனித Bingen Hildegard ஐ திருமறையின் வல்லுனர்கள் எனத் திருத்தந்தை அறிவிப்பார் எனப் பாப்பிறைத் திருவழிபாடுகளின் தலைவர் பேரருட்திரு Guido Marini அறிவித்துள்ளார்.
திருத்தந்தையின் அக்டோபர்-நவம்பர் நிகழ்வுகளை வெளியிட்ட பேரருட்திரு Marini, அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் லொரேத்தோ திருத்தலத்துக்கு மேய்ப்புப்பணித் திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டு நினைவாக, அத்திருத்தலத்துக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்டும் வருகிற அக்டோபர் 4ம் தேதி திருப்பயணம் மேற்கொள்வார் என்றும் அறிவித்துள்ளார்.
அக்டோபர் 4ம் தேதி உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு லொரேத்தோ திருத்தல வளாகத்தில் திருப்பலி நிகழ்த்திய பின்னர் மாலையில் உரோம் திரும்புவார் திருத்தந்தை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அக்டோபர் 21ம் தேதி ஏழு அருளாளர்களைப் புனிதர்கள் என அறிவிக்கும் திருத்தந்தை, அக்டோபர் 28ம் தேதி வத்திக்கான் பசிலிக்காவில் உலக ஆயர்கள் மாமன்ற நிறைவுத் திருப்பலியையும் நிகழ்த்துவார் என்றும் பேரருட்திரு Marini கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.