2012-09-20 16:40:47

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழிக் கல்வியை மேம்படுத்த முன்வந்துள்ளது தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்


செப்.20, 2012. புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களுக்குத் தமிழ் மொழிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்து சேவையாற்ற தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழியில் திறமை பெற வேண்டுமானால் அவர்களின் வீட்டு மொழி தமிழாக அமைய வேண்டும் மற்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு தமிழ் மொழியிலேயே பேச வேண்டும், அப்போதுதான் குழந்தைகளும் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள் என்றார், தமிழ்நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ.
மேலும், உலக நாடுகளில் தமிழ்க் கல்வியை வளர்க்க உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கிளைகளோடு இணைந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் செயலாற்றத் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.