நேர்காணல் – இந்தியாவில் மனித உரிமைகள் – அருள்தந்தை ஜே.ஸ்டானி சே.ச.
செப்.20,2012. அன்பு நேயர்களே, இயேசு சபை அருள்தந்தை ஜே.ஸ்டானி, குஜராத் மாநில இயேசு
சபையைச் சேர்ந்த ஒரு மனித உரிமை வழக்கறிஞர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அம்மாநிலத்தில் பணியாற்றிய
இவர், குஜராத் மாநிலப் பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காகப் பல ஆண்டுகள் உழைத்திருப்பவர்.
28 பழங்குடி இனப் பெண்கள் உட்பட 43 பழங்குடி இன மக்களை வழக்கறிஞர்களாக உருவாக்கியிருப்பவர்.
அதற்காக அஷோகா ஃபெல்லோஷிப் என்ற பன்னாட்டு விருதையும் பெற்றிருப்பவர். தற்போது டெல்லியில்
இருந்துகொண்டு, தெற்காசிய இயேசு சபை சமூக எழுச்சி இயக்கங்களுக்கு ஒருங்கிணைப்பாளராகப்
பணியாற்றி வருகிறார். சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் அவையின்
21வது அமர்வு நடைபெற்றுவரும் இவ்வேளையில் இயேசு சபை அருள்தந்தை ஜே.ஸ்டானியிடம் இந்தியாவில்
மனித உரிமைகள் நிலவரம் பற்றிக் கேட்டோம்.