Home Archivio
2012-09-20 16:08:49
கவிதைக் கனவுகள் - சாதித்து என்ன பயன்? ( கவிஞர் அ.கௌதமன், திருச்சி)
வீசுகின்ற தென்றல் என்றும்
பேதம் பார்ப்பதில்லை
வண்ண வண்ண மலர்களும்
வாசம் தர மறுப்பதில்லை
எண்ணிலடங்கா கனிவகையும்
சுவைகூட்ட மறுப்பதில்லை
மனித உரிமை இருந்தும்
மனிதா அதை நீ
மறந்து சாதி பற்றிப் பேசுகிறாய்
சடங்குகளைச் சேர்க்கிறாய்
சாதி இழிவு செய்கிறாய்...நீ
சாதித்து என்ன பயன்?
All the contents on this site are copyrighted ©.