2012-09-19 13:14:14

செப். 20, 2012. கவிதைக் கனவுகள்............. தவறு-மன்னிப்பு - கண்ணதாசன்


எல்லாமே பாவனையாக,
மன்னிப்பு கேட்டு, கேட்டு...
மன்னிப்பு கொடுத்து, கொடுத்து -
மன்னிப்புக்கு மரியாதை
இல்லாமல் போனது...

மன்னிக்கப்படுவோம்
என்பதாலேயே பல
தவறுகள் செய்கிறோமோ...

ஒரு நொடிப் பொழுதில்
விழும் அடி,
ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே
என்பதை உணர்வதில்லை...

யாரோ ஒருவரின் தவறால் -
நான் பாதிக்கப்படும் போது,
தவறின் வீச்சு புரிகிறது...

மன்னிக்க முடியாத
இயலாமையும் பிடிபடுகிறது...








All the contents on this site are copyrighted ©.