கடலுக்கடியில் கண்ணிவெடி: முப்பது நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி
செப்.18,2012. கடலுக்கடியில் புதைக்கப்படும் கண்ணிவெடிகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை எப்படி
சமாளிப்பது என்று அமெரிக்கா தலைமையில் பயிற்சியெடுப்பதற்காக முப்பது நாடுகளைச் சேர்ந்த
போர்க் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் பஹ்ரைனை ஒட்டிய கடல்பரப்பில் சங்கமித்துள்ளன. மத்திய
கிழக்கில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிதாக நடத்தப்படும் இதுபோன்ற கடற்படைப் பயிற்சி
இது என்று கூறப்படுகிறது. கடலுக்கடியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டால் அதனை எப்படிக்
கண்டறிவது, எப்படி அகற்றுவது, மற்றவர்களை விழிப்புடன் இருக்கச் செய்வது என்பதையெல்லாம்
கற்றுக்கொண்டு பயிற்சி செய்து பார்ப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம். இந்தக் கூட்டுப்
பயிற்சி ஒரு புறமிருக்க, வழக்கத்துக்கு மாறாக தற்போது அமெரிக்காவின் மூன்று விமானதாங்கி
போர்க் கப்பல்கள் வளைகுடாப் பகுதிக்குச் சென்றுகொண்டிருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன.