2012-09-16 13:54:57

செப். 17. கவிதைக் கனவுகள் – போதுமடாசாமி – எழுதியவர் அகணி, கனடா


தாய் நாட்டு உணர்வு
வெறுமனே இருக்க
காலம் செல்கிறது
பலன் ஏதும் இல்லை

உறவுகளின் நிலைமை
விடிவு ஏதுமின்றி
அவலத்தில் தொடர்கின்றது

ஓய்வின்றி உழைத்தாலும்
மிஞ்சுவது ஏதோ
உலகப் பொருளாதாரம்
கடித்துக் கொள்கிறது

அநீதிகள்
சுரண்டல்கள்
போலிப் பேச்சுக்கள்
ஆட்சி புரிகின்றன

போதுமடா சாமி
இந்தப் போலி உலகம்
நீதியான உலகம்
வேண்டும் வாழ்வதற்கு








All the contents on this site are copyrighted ©.