திருமணத்தின் புனிதத்துவம் காக்கப்பட ஆஸ்திரேலியத் தலைவர்கள் அழைப்பு
செப்.14, 2012. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஐக்கியமாகத் திருமணத்தை நோக்கி அதன்
உன்னத தன்மையைக் காக்க ஆஸ்திரேலியத் தலைவர்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்
அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள். ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தை நோக்கி இந்த அழைப்பை
முன்வைத்துள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், திருமணங்கள் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும்
என்பதில் கிறிஸ்தவ சபைகளும் தங்கள் அர்ப்பணத்தை வெளியிட விரும்புகின்றன எனத் தெரிவித்துள்ளனர். ஒரே
பாலினத் திருமணங்களும், திருமணமின்றியே சேர்ந்து வாழ்தலும் ஊக்குவிக்கப்படும் இன்றைய
நவீன உலகில், குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு, திருமணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயானதாக
வலியுறுத்தப்பட்டு அதன் புனிதத்துவம் காக்கப்படவேண்டும் என அழைப்பு விடுக்கும் இவ்வறிக்கையில்,
சிட்னி கர்தினால் ஜார்ஜ் பெல், 19 கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் மற்றும் 260 கிறிஸ்தவ
குருக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.