மரணதண்டனை சட்டம் இரத்து செய்யப்படுமாறு பிலடெல்பியா பேராயர் வலியுறுத்தல்
செப்.12,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டு பென்சில்வேனிய மாநிலத்தில் மூன்று குற்றவாளிகள்
மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திருக்கும்வேளை, அம்மாநிலத்தில் மரணதண்டனை சட்டத்தை
இரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார் பிலடெல்பியா பேராயர் சார்லஸ் சாபுட். கடவுளின்
குழந்தைகள் என்ற முறையில் மரணதண்டனைக்கு எதிராக நாம் செயல்பட வேண்டியுள்ளது என்று கூறியுள்ள
பேராயர் சாபுட், வன்முறை, வன்முறைக்கே இட்டுச் செல்லும் என்பதால் மரணதண்டனை ஒருபோதும்
குற்றங்களைக் களைய உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார். பென்சில்வேனியாவில் கடந்த
13 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மரணதண்டனை நிறைவேற்றப்படவிருக்கின்றது. மேலும்,
நியுயார்க் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான நினைவு தினத்தை இச்செவ்வாயன்று
அமெரிக்க ஐக்கிய நாட்டுக் சமய மற்றும் அரசு அதிகாரிகள் எளிமையாகக் கடைப்பிடித்தனர்.