2012-09-11 16:33:11

போதிய சத்துணவின்மையால் குவாத்தமாலா நாட்டில் குழந்தைகள் இறப்பு அதிகரிப்பு


செப்.11,2012. போதிய சத்துணவின்மையால் குவாத்தமாலா நாட்டில் இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 95 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கத்தோலிக்கச் செய்தி நிறுவனமான ஃபிதெஸ் அறிவிக்கின்றது.
குவாத்தமாலா நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கு ஒருவர் வீதம் போதிய சத்துணவின்மையால் துன்புறுவதாக உரைக்கும் இச்செய்தி நிறுவனம், 2011ம் ஆண்டில் 125 குழந்தைகளும், 2010ம் ஆண்டில் 105 குழந்தைகளும் 2009ம் ஆண்டில் 160 குழந்தைகளும், போதிய சத்துணவின்மைக்குப் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.