2012-09-10 17:18:58

போஸ்னியச் சண்டையினால் ஏற்பட்ட அனைத்துக் காயங்களும் குணப்படுத்தப்படும்படியாக கர்தினால் Puljic செபம்


செப்.10,2012. கடவுள் ஒருதலைச்சார்பாக இருந்து செயல்படுபவர் அல்ல என்று சரயேவோ அனைத்துலக அமைதி மாநாட்டில் கூறிய அந்நகர்ப் பேராயர் கர்தினால் Vinko Puljic, போஸ்னியச் சண்டையினால் ஏற்பட்ட அனைத்துக் காயங்களும் குணப்படுத்தப்படும்படியாகச் செபித்தார்.
போஸ்னிய-எர்செகொவினாக் குடியரசின் Sarajevoவில் இடம்பெற்றுவரும் மூன்று நாள் மாநாட்டில் செர்பிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Irinej Irinejவுடன் சேர்ந்து இவ்வாறு உரைத்த கர்தினால் புல்யிச், போரின் அனைத்துக் கொடுமைகளையும் தாங்கிக் கொள்வதற்கு செபமே உதவியது என்றும் கூறினார்.
இம்மாநாடு முடிகின்ற இச்செவ்வாயன்று இதில் பங்கு கொள்ளும் தலைவர்கள் இணைந்து உலகினருக்கெனச் செய்தி ஒன்றையும் வெளியிடவுள்ளனர்.
ஒன்றிணைந்து வாழும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடந்துவரும் இம்மாநாட்டில் இரான் குடியரசின் Ayatollah Khameneiன் முக்கிய ஆலோசகர் உட்பட பல சமயத் தலைவர்களும், இத்தாலிய பிரதமர் Mario Monti, ஐரோப்பிய அவையின் தலைவர் Herman Van Rompuy உட்பட சில அரசியல் தலைவர்களும் மற்ற பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.