2012-09-08 14:14:25

தலத்திருஅவை ஆதரவு பெற்ற மிசோராம் மக்கள் கழகம் நேர்மையான தேர்தல் ஒப்பந்தத்தில் கையொப்பம்


செப்.08,2012. இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்கள், நேர்மையான வழிகளில் நடப்பதற்கு உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் தலத்திருஅவை ஆதரவு பெற்ற மிசோராம் மக்கள் கழகம் கையெழுத்திட்டுள்ளது.
மிசோராம் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள், சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு உறுதியளிக்கும் விதத்தில், அம்மாநிலத்தின் பெரிய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது மிசோராம் மக்கள் கழகம்.
இந்த ஒப்பந்தத்தில் ஏமாற்று வேலைகளைத் தவிர்ப்பது உட்பட 27 படிநிலைகள் கொண்ட தேர்தல் வழிமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன என்று யூக்கா செய்தி நிறுவனம் அறிவித்தது.
வேட்பாளர்களை ஆதரிக்கும் தொண்டர்கள், அக்கட்சி அடையாளங்களைக் கொண்ட தொப்பிகள், சட்டைகளில் அணியும் சின்னங்கள், பனியன்கள் போன்றவற்றை அணிவதில்லை என்றும், தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சிக் கொடிகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.