2012-09-07 16:25:54

அதிகப் பாதுகாப்பான உலகம் அமைவதற்கு அணுப் பரிசோதனைகள் நிறுத்தப்பட வேண்டும் – ஐ.நா.


செப்.07,2012. அதிகப் பாதுகாப்பான உலகத்தைப் பார்ப்பதற்கு அணுப் பரிசோதனைகள் நிறுத்தப்படுவது அவசியம் என, அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான மூன்றாவது அனைத்துலக நாளில் ஐ.நா.அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த நாளையொட்டி ஒலி-ஒளிச் செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அணுப் பரிசோதனைகள் மனித நலவாழ்வுக்கும் உலகின் நிலையான தன்மைக்கும் அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விதமான அணுப் பரிசோதனைகள் தடை ஒப்பந்தத்தில் 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவற்றில் 157 நாடுகள் அதனை அமல்படுத்தியுள்ளன. ஆயினும் இந்த ஒப்பந்தம் உலக அளவில் அமலுக்கு வருவதற்கு இன்னும் இரு நாடுகளின் கையெழுத்து தேவைப்படுவதாக ஐ.நா.செய்திகள் கூறுகின்றன.
1991ம் ஆண்டிலிருந்து அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான அனைத்துலக நாள் ஆகஸ்ட் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.