2012-09-04 15:47:57

Rimsha Masih கடவுளின் திருவருளால் காப்பாற்றப்பட்டுள்ளார் : லாகூர் அமைதி மைய இயக்குனர்


செப்.04,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டத்தின்கீழ் பலிகடா ஆக்கப்பட்டுள்ள மனநலம் குறைபாடுள்ள சிறுமி Rimsha Masih, கடவுளின் திருவருளால் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று லாகூர் அமைதி மைய இயக்குனர் அருள்தந்தை James Channan கூறினார்.
சிறுமி Rimsha, குர்-ஆனின் பக்கங்களை எரித்ததன் மூலம் இஸ்லாத்தை இழிவுபடுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், அவளது பையிலிருந்து எடுக்கப்பட்ட எரிந்த சில காகிதங்களுடன் இருந்த குர்ஆனின் பக்கங்களை Hafiz Mohammed Khalid Chishti என்ற இசுலாமிய மதபோதகர் வைத்ததாக நீதிபதியிடம் ஒருவர் சாட்சி சொன்னதைத் தொடர்ந்து அந்த மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த அருள்தந்தை Channan, இச்சிறுமியின் விவகாரத்தில் நீதி கிடைத்து அவள் விடுதலை செய்யப்படுவாள் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு தவறாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பதற்கு சிறுமி Rimsha Masihன் கைதே சான்று எனவும் அக்குரு கூறினார்.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள 14 வயதுச் சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு இம்மாதம் 18ம் தேதி சிறையில் வைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள இசுலாமிய மதகுரு Khalid Chishtiவும் தேவநிந்தனை சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென ரிம்ஷியின் வழக்கறிஞர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.