2012-09-03 16:47:33

நற்செய்திப்பணியின் புதிய முறைகளில் சமூகத்தொடர்பு சாதனங்களின் பங்கு குறித்த ஆசிய ஆயர்கள் கூட்டம்


செப்.03,2012. “நவீன ஊடகத்துறை : ஆசிய சமூகத்தொடர்புப் பணிக்கு முன்வைக்கும் சவால்களும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் தாய்லாந்து நாட்டு பாங்காக்கில் இத்திங்களன்று கூட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர் ஆசிய ஆயர்கள்.
FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் சமூகத்தொடர்பு பணிக்குழுவான BISCOM ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli இச்செவ்வாயன்று உரை நிகழ்த்துவார்.
இம்மாதம் 9ம் தேதிவரை நடைபெறும் BISCOMன் இந்த 8வது கூட்டத்தில் நற்செய்திப்பணியின் புதிய முறைகளில், இணையத்தளம், Blogging, Twitter போன்ற நவீன சமூகத்தொடர்புச் சாதனங்களின் பங்கு குறித்து ஆசிய ஆயர்கள் கலந்துரையாடவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FABC என்பது 16 ஆசிய நாடுகளின் 19 ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாகும்.







All the contents on this site are copyrighted ©.