2012-09-03 16:46:17

குழந்தை பிறப்புக்கால இறப்பில் தமிழகத்தில் நீலகிரி முதலிடம் : சென்னையில் குறைவு


செப்.03,2012. குழந்தை பிறப்புக்கால இறப்புகளில், நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது எனவும், இதைக் குறைக்க, மருத்துவத்துறை திட்டம் வகுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்புக்கால இறப்பு, 2007ல், ஒரு இலட்சத்திற்கு, 200 என்ற விகிதத்தில் இருந்ததை, வரும் 2015ல், 107 ஆக குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும், 2000ம் ஆண்டில், 5.29 இலட்சம் பெண்கள், குழந்தை பிறப்பின்போது இறந்துள்ளதில், 95 விழுக்காடு, ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஆண்டிற்கு ஒரு இலட்சம் பேர் குழந்தை பிறப்புக்காலத்தில் இறக்கின்றனர்; உலக அளவில், இந்தியாவில், 20 சதவீத இறப்பு உள்ளது. தமிழகத்தில் குழந்தை பிறப்புக்கால இறப்பு குறைந்து வருகின்றபோதிலும், ஆண்டிற்கு, 1,100 பெண்கள் குழந்தை பிறப்பின்போது பல்வேறு மருத்துவக் காரணங்களால் இறக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பின்போது இடம்பெறும் இறப்புகளைக் குறைக்க, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் சார்பில், விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவும், குழந்தை பிறப்புக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறை குறித்துப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.