திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து
கலந்துரையாடி வருகின்றனர்
ஆக.31,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் அவரோடு சேர்ந்து
கத்தோலிக்கத் திருஅவை, பிற கிறிஸ்தவ சபைகளுடன் கொண்டிருக்கும் உறவுகள் குறித்து கலந்துரையாடி
வருகின்றனர் என்று வியன்னா கர்தினால் Christoph Schonborn கூறினார். முன்னாள் பேராசிரியர்
ஜோசப் இராட்சிங்கரின் முன்னாள் முனைவர் பட்ட மாணவராகிய கர்தினால் Schonborn வத்திக்கான்
வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின்
முன்னாள் மாணவர்கள் அவரோடு சேர்ந்து நடத்திவரும் மூன்று நாள் கூட்டத்தில் கத்தோலிக்கத்
திருஅவை, ஆங்லிக்கன் மற்றும் லூத்தரன் கிறிஸ்தவ சபைகளுடன் கொண்டிருக்கும் உறவுகள் குறித்து
கலந்துரையாடி வருகின்றனர் என கர்தினால் Schonborn கூறினார். ஆங்லிக்கன் மற்றும் லூத்தரன்
கிறிஸ்தவ சபைகள் தங்களது 500வது ஆண்டு நிறைவை 2017ம் ஆண்டில் சிறப்பிக்கவிருப்பதை முன்னிட்டு
திருத்தந்தையுடன் இடம்பெறும் இக்கூட்டத்தில் இச்சபைகளுடன் கத்தோலிக்கத் திருஅவை கொண்டுள்ள
உறவு குறித்துப் பேசப்படுவதாகவும் கர்தினால் Schonborn கூறினார்.