அனைத்துலக காணாமல்போனோர் தினத்தையொட்டி நாடுகளில் போராட்டம்
ஆக.31,2012. அனைத்துலக காணாமல்போனோர் தினத்தையொட்டி இவ்வியாழனன்று இலங்கையிலும் பிலிப்பீன்சிலும்
போராட்டங்கள் நடத்தப்பட்டன. காணாமல்போனவர்கள் தொடர்பாக, ஐ.நா.வின் நடவடிக்கைக் குழுவின்
மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வவுனியாவில் நடத்தப்பட்ட
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்தப்
போராட்டத்தில், காணாமல்போயுள்ள தங்களது கணவர்களும். பிள்ளைகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்,
அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரிவிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் மிகுந்த வேதனையுடன்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.