ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் முள்ளிக்குளம் பகுதியில் விண்ணேற்படைந்த அன்னை
மரியாவின் திருநாள்
ஆக.30,2012. வட இலங்கையின் முள்ளிக்குளம் பகுதியில் விண்ணேற்படைந்த அன்னை மரியா திருநாளை
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கத்தோலிக்கர்கள் கொண்டாடினர். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் 20க்கும் அதிகமான அருள் பணியாளர்கள் கலந்து
கொண்டனர். முள்ளிக்குளம் பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அதிகம் உள்ளதென்று காரணம் கூறி,
அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை இராணுவம் தடை செய்துள்ளது. அன்னை மரியாவின் விண்ணேற்புத்
திருநாளைக் கொண்டாடுவதற்காக இராணுவம் தன் தடைகளைத் தளர்த்தியது என்று UCA செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது. மின்சக்தியையும், மருத்துவ உதவிகளையும் வழங்கிய இராணுவத்தின் உதவியுடன்
நடைபெற்ற இவ்விழாவில் 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.