2012-08-29 15:58:45

குஜராத் கலவரம்: 32 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு


ஆக.29, 2012. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் தொடர்புடையவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 32 பேர் குற்றவாளிகள் என்று அம்மாநில சிறப்பு நீதிமன்றம் இப்புதனன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான Maya Kodnani மற்றும் பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் Babu Bajrangi ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கானத் தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Naroda-Patiya கலவரம் என்று அழைக்கப்படும் அந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 29 பேர் குற்றமற்றவர்கள் என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.
Ahmedabad நகரில் உள்ள Naroda-Patiya பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2002-ம் ஆண்டு, கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்தில் 60 இந்து திருப்பயணிகள் கொல்லப்பட்டதையடுத்து நடந்த இனக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களி்ல் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.







All the contents on this site are copyrighted ©.